கரூரில் தலைகவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி..!
கரூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்கள் பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் கரூரில் உள்ள அனைத்து கிளை சங்கங்களும் இணைந்து ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தியுள்ளனர்.
இந்த பேரணி கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் தொடங்கிய இந்த பேரணியை, கரூர் நகர காவல் உதவி ஆய்வாளர் சண்முக வடிவேல் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். இந்த பேரணியில் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்குவோர் சங்கத்தில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் தலைகவசம் அணிந்து கொண்டு இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியானது கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் துவங்கி பழைய பை – பாஸ் சாலை வழியாக பேருந்து நிலையம், மேற்கு பிரதட்சணம் சாலை, வடக்கு பிரதட்சணம் சாலை, ஆசாத் சாலை வழியாக சென்று அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்புறம் வரை சென்று பேரணியை முடித்து வைத்துள்ளனர்.., இந்த பேரணி குறித்து பேசிய இரு சக்கர வாகனங்கள் பழுது பார்ப்போர் சங்கம் தலைவர் விபத்து நேர்வதற்கு அருகில் வரும் வாகனம் மட்டுமல்ல நாமும் தான்.
* வாகனத்தை அதி வேகத்தில் ஓட்டுவது,
* ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டுவது,
* சிக்னலில் நிற்காமல் செல்வது,
* செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது,
இதுபோன்ற செயலில் ஈடுபடுவதால் தான் விபத்து நேரிடுகிறது.., அது பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வர வேண்டும் என்பதற்காக தான் இந்த பேரணி என கூறினார்.