அசாம் மாநிலத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காமாக்யா கோவிலில் இறந்தவர்களை மீட்டு கொண்டுவரும் நரபலி பூஜையில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நரபலி பூஜை:
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அசாம் மாநிலத்தில் உள்ள காமாக்யா கோவில் தாந்திரீக நடைமுறைகளின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான வழிபாட்டு தலமாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் அம்புபாச்சி மேளா நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவில் இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வருவதாக நடத்தப்பட்ட நரபலி பூஜையில் 64 வயது பெண்மணி தலை துண்டிக்கப்பட்டு பலி கொடுக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கில் நரபலிக்காக பெண்ணின் தலையை துண்டித்ததாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாதுவின் சதித்திட்டம்:
2019ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் தேதி அன்று, காமக்யா கோயில் வளாகத்தில் உள்ள ஜெய் துர்கா மந்திர் படிக்கட்டில் சுமார் 64 வயது மதிக்கத்தக்க பெண்மணியின் உடல் போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஜலுக்பரி போலீசார், முதற்கட்ட விசாரணையில் இறந்த பெண்மணி மேற்குவங்கத்தில் இருந்து இரண்டு பெண்கள் மற்றும் சாதுக்களுடன் வந்தது கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஹூக்ளி மாவட்டத்தில் வசிக்கும் அவரது மகனை வரவழைத்து உடல் அடையாளம் காணப்பட்டது.
இதனையடுத்து அதிரடி திருப்பமாக 2019ம் ஆண்டு ஜூன் மாத வாக்கில், மாதா பிரசாத் பாண்டே என்ற பெண் சாதுவால் அஸ்ஸாமிற்கு அழைத்து வரப்பட்டது தெரியவந்தது. மேலும் இதே வழக்கில் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த மாதேஸ்வரி கிரி என்ற பாண்டே கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அம்புபாச்சி மேளாவுக்கு சில நாட்களுக்கு முன்பு காளி தேவிக்கு அப்பெண்ணை நரபலி கொடுத்தது தெரியவந்தது.
நடந்தது என்ன?
2019 ஆம் ஆண்டு ஜூன் 18-19 ஆம் தேதி இடைப்பட்ட இரவில், அந்த பெண்ணும் முதன்முதலில் கபாலி பூஜை என்ற தந்திரப் பயிற்சியை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு சாதுக்கள் உட்பட அனைவரும் மது அருந்தி இருந்த நிலையில், அந்த பெண்ணை ஜாய் துர்கா மந்திருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கிருந்த படிக்கட்டில் சிறப்பு பூஜைகள் செய்வதாக கூறி அந்த பெண் விழுந்து வணங்கும் போது கோடாரியால் தலையை வெட்டி காளி தேவிக்கு நரபலி கொடுத்துள்ளனர்.
அதன் பின்னர் அந்த தலையை பக்கெட்டில் எடுத்துச் சென்று பிரம்மபுத்திரா நதியில் போட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.a