ADVERTISEMENT
சாலை போட்டு ஒரு மாதத்திற்குள் சாலை கையோடு பெயர்ந்து வருவதால் போராட்டம்!!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் தரமற்ற முறையில் தார்சலை அமைத்த அரசு ஒப்பந்ததாரர் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கீழ் ஆனைமங்கலம் மாதா கோவில் பகுதியில் தார் சாலை அமைத்திடவேண்டுமென அப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையை தொடர்ந்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஐந்து கிலோ மீட்டர்தூரம் தார் சாலை போடப்பட்டுள்ளது.
ஆனால் தார் சாலை போடப்பட்ட ஒரு மாதத்திற்குள்ளேயே சாலை கையோடு பெயர்ந்து வரும் அளவிற்கு தரமற்ற முறையில் உள்ளதால், மீண்டும் சேரும் சகதியுமான சாலையில் நடக்கும் அவல நிலை ஏற்படும் சூழல் உருவாகும் வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, தரமற்ற முறையில் தார்சலை அமைத்த அரசு ஒப்பந்ததாரர் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் தரமான தார்சாலை அமைத்திட வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.