கைதான செந்தில் பாலாஜி..!! விவாதத்தில் அமலாக்கத் துறை..!!
ஆட்கொணர்வு வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி, மனுவை மேல் முறையீடு செய்து இருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது அமலாக்க துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
அப்போது செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்காமல் பல இடையூறுகளை கொடுத்துள்ளார். விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்காததால் அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாலை 1:39 மணிக்கு கைது செய்யப்பட்டார்.
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால் விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை எனவே உச்சநீதி மன்றம் அவரை மருத்துவமனை மற்றும் நீதிமன்ற காவலில் இருந்து 15 நாட்களாக எடுத்துக்கொள்ள கூடாது என தெரிவித்து இருந்தார்.
தற்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும், கஸ்டடி வழங்காவிட்டால் விசாரணை பாதிக்கப்படும். கைதுக்கான காரணங்கள் குறித்து நாங்கள் விளக்கி விட்டோம். மீண்டும் அமலாக்கதுறை விசாரணை செய்வது ஏன்..? தான் தாக்கப்பட்டதாக சொல்லும் செந்தில் பாலாஜி.., அந்த காயங்கள் நீதிபதியிடம் காட்டாமல் இருப்பது ஏன் தொடர் வாதங்களை வழக்கறிஞர் துஷார் மேத்தா கேள்விகள் எழுப்பினார்.