விண்ணுக்கு பறக்க ரெடியா..? இந்த மாஸ் திட்டம் நல்லா இருக்கே..
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்க்கான 24 மணி நேர கவுண்ட் டவுன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தை செயல்படுத்த ஆயத்த பணிகளை இஸ்ரோ தற்போது மேற்கொண்டு வருகிறது.
இதில் முதற்கட்டமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட வீரர்கள் மீண்டும் பூமியில் பத்திரமாக தரையிறக்குவதற்கான சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இன்டகிரேடட் ஏர் டிராப் டெஸ்ட் க்ரூ மாடல் எனப்படும் கட்டமைப்பின் மாதிரி தயாரிக்கபட்டுள்ளது.
இந்நிலையில் ‘டிவி-டி1’ என்ற சோதனை ராக்கெட்டின் சோதனை ஓட்டம் வருகிற 21ம் தேதி நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட ஆளில்லா சோதனை நாளை காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இதற்கான 24 மணி நேர கவுண்ட் டவுன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது…