உத்திரபிரதேசத்தில் குர்பான் அலி என்ற இளைஞர் தன்னை தண்டித்த போலீசாரை பழிவாங்குவதற்காக போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிக்கியுள்ளார். தற்போது இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.
உதிர்ப்பிரேதச மாநிலத்தில் உள்ள மாநில காவல் கட்டுப்பாடு அறைக்கு ஒருவர் போன் செய்துள்ளார். அந்த அழைப்பில் பேசிய நபர் கோரக்பூரில் இருந்து பேசுவதாகவும், மற்றும் உதிர்ப்பிரதேசத்திலுள்ள கோரக்நாத் கோவிலுக்குள் கேக் பார்சலில் வெடிகுண்டை எடுத்துக்கொண்டு 4 பேர் சென்றுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனை நம்பி போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு சோதனை கருவிகளை எடுத்துக்கொண்டு விரைவாக அந்த கோவிலுக்கு சென்று மும்முரமாக வெடிகுண்டை தேடிவந்தனர். ஆனால், தகவலின் படி எந்த ஒரு வெடிகுண்டும் அங்கு இல்லாததால் மீண்டும் கட்டுப்பாடு அறைக்கு வந்து தொடர்பு கொண்ட நம்பரை ட்ராக் செய்தனர்.
அப்போது அந்த நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த குர்பான் அலி என்பது தெரியவந்தது. அந்த இளைஞர் கோரக்பூரில் உள்ள பேக்கரிகளுக்கு உணவு பொருட்கள் சப்ளை செய்து வந்துள்ளார். ஒரு நாள் அவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது அங்கிருந்த காவல் துறையினர் அவர் வாகனத்திற்கு அபராதம் விதித்தும் அவரை தண்டித்து அனுப்பியதாகவும் தெரிகிறது. இதனால் கோவமான அந்த இளைஞர் கட்டுப்பாட்டு அறைக்கு பொய்யான தகவல் அளித்து பழிவாங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.