இனி மெட்ரோல போற அப்போ பயந்துட்டு போறதா..? இல்ல சந்தோஷமா போறதா..?
சென்னை மெட்ரோ ரயில்களின் இயக்கத்தை தடுப்பவா்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூட்ட நெரிசல் மிகுந்த நேரங்களில் ஒரு சில ரயில்களில் பயணிகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்படுவதுடன், சிலா் ரயில் கதவுகளை மூடவிடாமல் தடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், இது தண்டனைக்குரிய குற்றம் என எச்சரித்துள்ளது.
இம்மாதிரியான செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புச் சட்டத்தின்படி நான்கு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 5ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ரயிலின் இயக்கத்தைத் தடுப்பது, சிரமத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் யாராவது ஈடுபட்டால், 18604251515 என்ற வாடிக்கையாளா் உதவி எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.