அண்ணாமலை நல்லவர் தான் ஆனா..!! பாஜகவை கலாய்த்த துரை வைகோ..!!
அண்ணாமலை என்றும் நல்லவர் தான் ஆனால் அவர் இருக்கும் இடம் தான் சரியில்லை என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.. பாஜக சரியில்லை என்பதை அவர் நேரடியாக கலாய்த்துள்ளார்..
எங்களுக்கு ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை தூத்துக்குடியில் செய்தியாளர்கள் முன் துரைவைகோ தெரிவித்துள்ளார்.., மதிமுக முதன்மை செயலாளராக பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து எல்லாம் மாவட்டங்களிலும் பயணித்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து அவர்களின் நிறை குறைகளை கேட்டு அதை நிறைவேற்றி வருகிறார்.., துரைவைகோ
அந்த வகையில் தூத்துக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட துரை வைகோ பேசிய போது அண்ணாமலை நல்லவரு தான் ஆனால் அவரு இருக்க இடம் தான் சரியில்லை பாஜகவை எந்த அளவிற்கு சுருக்க முடியோமோ அந்த அளவிற்கு சுருக்கியுள்ளார்.., சில இடங்களில் அவர் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார்..
அரசியலில் முக்கியத்துவம் : மேலும் இந்தியா கூட்டணியில் யார் பிரதம வேட்பாளர் என்பதை எந்த கட்சியும் வெளிபடுத்தாத நிலையில் தற்போது துரை வைகோ மட்டும் பிரதம வேட்பாளர் ராகுல் காந்தி என்பதை தெரிவித்துள்ளார்..
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி அதற்கான வேலைகளை இந்திய கூட்டணி செய்து வருகிறது என துரை வைகோ தெரிவித்துள்ளார்..
அண்ணாமலை பாஜகவை தவிர எந்த அமைப்பில் இருந்தாலும் மக்களின் ஆதரவு கட்டாயம் கிடைக்கும்.., பாஜகவை பற்றி கடந்த வாரம் கருணாஸ் பேசியது இணையத்தில் வைரலாக பரவிய நிலையில் தற்போது துரை வைகோ பேசியதும் வைரலாக பரவி வருகிறது..