ஆம்ஸ்ட்ராங் மகள் மீது வழக்கு பதிவு செய்த அன்புமணி ராமதாஸ்..!! தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம்..!!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் 15 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.., அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது..
அவரது கொலையை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி சதீஷ் என்ற பெயரில் ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொற்கொடி, பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து சதீஷ் யார் என்பது பற்றியும் தீவிர போலீஸ் விசாரணை நடத்தப்பட்டது.. அந்த விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் பள்ளித் தாளாளர் அருண்ராஜ் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் மகள் மீது வழக்கு பதிவு செய்யப்ட்டுள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் வைரலாக பரவியது.., அப்படி ஆம்ஸ்ட்ராங் மகள் மீது வழக்கு பதிந்ததாக பரவும் செய்தி பொய்யானது என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது. அதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சிபிஐ விசாரணை கோரி அனுமதி இல்லாமல் பேரணி நடத்தியதாக அவரின் 2 வயது மகள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் பதிவிட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல் முற்றிலும் பொய்யான தகவல் என்றும், பேரணி தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் மீது வழக்குப்பதிவு எதுவும் செய்யப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளதாக, தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.