இந்தியாவிலேயே சொந்தமாக இரயில் வைத்திருக்கும் இந்திய விவசாயி..!
ஒவ்வொரு இந்தியரும் தனக்கு சொந்தமாக கார், பைக், விமானம் என வைத்திருப்பார்கள் ஆனால் சொந்தமாக இரயில் வைத்திருக்கும் இந்தியர் பற்றி கேள்வி பட்டது உண்டா..? ஒரு சிலருக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாது காரணம் இந்தியாவில் ரயில்வே துறை இந்திய அரசின் கீழ் உள்ளது. என்று தான்.
இந்த அரசாங்கத்திற்கு சொந்தமான ஒரு ரயிலை லூதியானாவை சேர்ந்த சாம்புரான் சிங் என்ற விவசாயி சொந்தாமாக ரயில் வைத்திருக்கிறார். சொந்தமாக ரயில் வைத்திருக்கும் அளவிற்கு எப்படி வருமானம் என இது பற்றி கேட்டபொழுது.., அவர் சொன்ன பதில். இதற்கு காரணம் தமிழக அரசு தான் என கூறினார்.
சம்புரன் சிங் லூதியானா கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயி 2007ம் ஆண்டு லூதியான சண்டிகர் ரயில் பாதையில் அமைக்கும் போது விவசாயிகள் நிலத்தை ரயில்வே துறை கைப்பற்றியது அப்போது ஒரு ஏக்கர் நிலத்திற்கு 25 லட்சம் எனவும் அறிவித்திருந்தது. அதற்கு அருகில் உள்ள நிலம் 71 லட்சம் வரை விலை போகும் அந்த விலையை நாங்கள் உங்களுக்கு கொடுக்கிறோம் என ரயில்வே நிறுவும் அறிவித்தது.
ஆனால் அந்த விவசாயிக்கு 25 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளனர்.., ஏமாற்றம் அடைந்த சாம்புரான் சிங் விவசாயி நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.., வழக்கை விசாரணை செய்த நீதிபதி மொத்தம் 1.47 கோடி அந்த விவசாயிக்கு தர வேண்டும் என இரயில்வே துறைக்கு உத்தரவிட்டார்.
உத்தரவின் பெயரில் இரயில்வே துறையின் 42 லட்சம் மட்டும் வழங்கியுள்ளது. 1.05 கோடி வழங்கப்பட வில்லை.., எனவே விவசாயி சாம்புரான் சிங், லூதியான நிலையத்திற்கு வந்த ரயிலை ஜப்தி செய்துள்ளார். எனவே 2015ம் ஆண்டு இது குறித்து வழக்கு விசாரணை தொடங்கிய நீதிபதிகள் இன்று வரை வழக்கை விசாரித்து கொண்டே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமையம் சாம்புரான் சிங் இந்திய இரயில்வே நிறுவனத்தில் இருந்து மாதம் மாதம்.., ஒரு பங்கை பெற்று வருகிறார்.., இது குறித்து பேசிய அவர் 5 நிமிடத்தில் நான் கைப்பற்றிய ரயிலை விடுவித்த நீதிபதிகள்.., இன்று வரை அதற்கு தீர்ப்பு வழங்காமல் இருப்பது மிகவும் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது, இந்த வழக்கிற்கு முடிவு வரும் வரை நானும் அதை விட மாட்டேன் என சாம்புரான் சிங் கூறினார்