இஸ்ரேலை எதிர்த்து களத்தில் இறங்கிய அமெரிக்கர்கள்..!
இஸ்ரேல் ஹமாஸ் போரை நிறுத்துவது குறித்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் கூட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பதில் அளிக்கவில்லை காசாவில் ஹமாஸ் படையை ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று அவர் கூறியுள்ளார் இவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில்.
இஸ்ரேல் நாட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இஸ்ரேலுக்கு தற்போதுவரை அமெரிக்கா ஆயுதங்களை சப்ளை செய்வதால் 30,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஏவுகணைகளும், பீரங்கி குண்டுகளும் தாக்கி பலர் கொல்லப்பட்டாலும், பசி, பட்டினியாலும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது என்பது வேதனை குறியது
இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தை சிலர் முற்றுகையிட்டு காசா மீதான போர் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சுமார் 300க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தின் முகப்பு பகுதியை முற்றுகையிட்டு, அமெரிக்க அரசின் நடவடிக்கைக்கு எதிரான குரலை எழுப்பி இஸ்ரேலுக்கு ஆயுதங்களை சப்ளை செய்ய கூடாது என்றும் முழக்கமிட்டனர். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..