அம்பேத்கார் பிறந்தநாள் உறுதி ஏற்போம்..!! மாஸ் காட்டிய விஜய்…!!
அண்ணல் அம்பேத்காரின் பிறந்த நாளான இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.., அன்னாரின் பிறந்தநாளிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களின் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்..
அண்ணல் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் சிலைக்கு பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் , அம்பேத்கரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக கூட்டாகச் செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து :
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான “சமத்துவ நாளினை”யொட்டி முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு,
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, முதலமைச்சர் தலைமையில் “சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்புள்ள அம்பேத்கர் திருவருசிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ஒடுக்கப்பட்டவர்களுக்காக சமுதாயத்தின் விளிபின் ஓரத்தில் தள்ளப்பட்டவர்களுக்காக அம்பேத்கர் வாழ்நாள் முழுவதும் போராடிதாக தெரிவித்தார்.
அரசியல் அமைப்பு சட்டத்தில் கை வைத்தால் இந்தியாவின் ஒருமைப்பாடு சிதறி போகும் என எச்சரித்த வைகோ, அண்ணல் அம்பேத்கர் தயாரித்து கொடுத்த அரசியல் சட்டத்தை பிரதமர் மோடி சிதைக்க நினைப்பதாக குற்றம்சாட்டினார்.
அதனை தொடர்ந்து நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அண்ணல் அம்பேத்கார் பிறந்தநாளில் அவர் வலியுறுத்தியுள்ள சமூக நீதி, சமத்துவம் மற்றும் சம உரிமை என அனைத்தும்.., சாமானிய மக்கள் வரை கிடைக்க வேண்டும்.., அதற்காக நாம் பாடுபடுவோம் என உறுதி ஏற்போம் என பதிவிட்டுள்ளார்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..