“அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா..” அரசியல் பேசிய விஜய்…!! செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு…!!
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அவரைப் பற்றி பேசாமல் அரசியல் பேசியது வருத்தத்துக்குரியது.
சோனியா காந்தி 78-வது பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இலவச மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட முகாம்களை செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார்.. மேலும் மாணவ மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வப் பெருந்தகை, “இந்தியா முழுவதும் உணவு பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வந்த அன்னபூரணி என்று தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரால் போற்றப்பட்டவர்..
பல சட்டங்கள் இந்தியாவிற்கு கொண்டு வந்தவர் நீண்ட நெடிய நாட்கள் காங்கிரஸின் தலைவராக இருந்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் கட்டாய கல்வி உணவு பாதுகாப்பு சட்டம் இப்படி பல சட்டங்கள் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு காரணமாக இருந்தவர் அப்படிப்பட்ட ஒரு மாபெரும் தலைவியின் பிறந்தநாளை பெருமையுடன் காங்கிரஸ் தமிழ்நாட்டில் கொண்டாடிக் கொண்டிருக்கிறது..
அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக எங்களுடைய தலைவர்கள் எல்லாம் சேர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.. அரசியல் யார் வேண்டுமானாலும் பேசலாம் பிறரை புண்படுத்தாமல் பேச வேண்டும் மன்ராட்சி என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள்..
மன்ராட்சியை 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மன்னராட்சி என்பது கேள்விக்குறியானது 1950 ஜனவரி 26 இல் குடியரசு ஆன பிறகு குடியரசு தூக்கியரிப்பட்டது. அதே மாதிரி 1971 ஆம் ஆண்டு 26 வது சட்ட திருத்தத்தின் மூலமாக இந்திரா காந்தி மன்னர் மானிய ஒழிப்பை கொண்டு வந்தார் அப்படி இருக்கும் பொழுது எங்கே இந்த மாநிலத்தில் மன்னராட்சி இருக்கிறது.
பேசும்பொழுது பிற கட்சிகளோ பிற கட்சியின் தலைவர்களோ பொதுமக்களோ புண்படாமல் பேச வேண்டும் பேசுவதற்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டும் என்றாலும் பேச முடியாது அந்த பேச்சு எல்லாம் அவர்கள் தவிர்த்து இருக்க வேண்டும்..
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அவரைப் பற்றி அவர் பெருமையை பேசாமல் அரசியல் பேசியது வருத்தத்துக்குரியதுதான்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..