ADVERTISEMENT
வறுமையை காரணம் காட்டி படிப்பை நிறுத்தக்கூடாது-அமைச்சர் அன்பில் மகேஷ்
வறுமையை காரணம் காட்டி படிப்பை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் முறைகளை அரசு பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் உயர்கல்விக்கான தெற்காசிய மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது.
மாநாட்டை தொடங்கி வைத்த பின் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் பள்ளிப்படிப்பு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை அளிக்க வேண்டும் என்பதே அரசின் முழு கொள்கையாக இருந்து வருவதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.