இரண்டரை வருடங்களுக்கு பிறகு தான் வளர்த்த இரண்டு குட்டி யானைகளையும் பார்த்த பெல்லியம்மாள் முத்தமிட்டு ஆனந்த கண்ணீர் விட்டதில் அங்கிருந்த வனத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் பொம்மி மற்றும் ரகு என்ற இரு யானைகள் தாயிடமிருந்து பிரிந்து முதுமலை கொண்டுவரப்பட்டு பெல்லி மற்றும் அவரது கணவர் பொம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது.
யானைகளை தனது குழந்தை போல் வளர்த்த தம்பதிகளின் ஆவணப்படம் ‘தி எலிஃபன்ட்
விஸ்பரர்ஸ்’ என்ற பெயரில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இன்று சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்ட சூழ்நிலையில், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதுமலையில் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் வளர்க்கப்படும் குட்டி யானைகள் வேறு பாகன்களிடம் ஒப்படைத்து அதனை பராமரிக்கும் பணிகளை நடந்து வருகிறது.
குறிப்பாக . இந்த நிலையில் தான் வளர்த்து வேறு பாகனிடம் விடப்பட்ட பொம்மி யானையிடம் இருந்து பிரிந்து இரண்டரை வருடமாக இந்த பெல்லி வாழ்ந்து வந்த சூழ்நிலையில் இன்று ஆஸ்கர் விருது வழங்கிய சூழ்நிலையில் வனத்துறை சார்பாக பொம்மி மற்றும் ரகு யானையுடன் பெல்லி அம்மாள் அருகே நிற்கவைக்கப்பட்டது.
பொம்மி யானையை பார்த்ததும் பெல்லியம்மாள் ஆனந்தக் கண்ணீரில் கண் கலங்கி அழுது முத்தம் கொடுத்து குட்டி யானை பொம்மியிடம் பேசியது அங்கிருந்து பொதுமக்கள் மட்டுமின்றி வனத்துறையினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Discussion about this post