அடேயப்பா இந்த அறிக்கை நல்லா இருக்கே..!
நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் திமுகவில் தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என்று 3 குழுக்களை முதலமைச்சர் ஸ்டாலின் அமைத்தார்.
திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.அதன்படி, சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கப்படும் என்றும், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என திமுக தேர்தல் அறிக்கை சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல், டீசல் விலை 65 ரூபாய் ஒட்டி நிர்ணயிக்கப்படும் என்றும், பெட்ரோல் விலை 75 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. வங்கிகளில் குறைந்தபட்ச தொகை இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் முற்றிலும் நீக்கப்படும் என்றும், மாணவர்களுக்கான கல்வி கடன் நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவி குழுவினருக்கு 10 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்றும், மாநிலங்கள் சுயாட்சி பெற சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. சமையல் சிலிண்டர் விலை 500 ரூபாயாக நிர்ணயிக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
நிகழ்வில் பேசிய முதலமைச்சர், இது திமுகவின் தேர்தல் அறிக்கை மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் அறிக்கை என தெரிவித்தார். இந்தியாவை எல்லா வகையிலும் பாஜக அரசு மிக மோசமாக பாழ்படுத்தியதாக குறிப்பிட்ட முதலமைச்சர், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்.
தனது கையில் கிடைத்த அதிகாரத்தை பா.ஜ.க. அரசு வீணடித்துவிட்டதாக தெரிவித்த அவர், இனியும் மோடி ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல என எச்சரித்தார்.