அதானி மீதான வழக்கு மீண்டும் விசாரணை..!! அமெரிக்கா வெளியிட்ட தீர்ப்பு..?
கடந்த 2023 ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமம் பங்குச்சந்தை மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியது.
இதையடுத்து அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது இதனால் 11 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் முறைகேடான செயல்பாடுகளுக்காக அதானி லஞ்சம் கொடுத்துள்ளதா என்பது குறித்த விசாரணையை தற்போது அமெரிக்கா தீவிரப்படுத்தி உள்ளது.
அமெரிக்காவிலும் எரிசக்தி துறை சார்ந்த நிறுவனங்களை நடத்தி வரும் அதானி குழுமமோ அல்லது அதன் தலைவர் கவுதம் அதானியோ தங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வழங்க இந்தியாவில் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
வாஷிங்டனில் உள்ள அமெரிக்க சட்டத்துறையின் கீழ் இயங்கும் மோசடி விசாரணை பிரிவு, கவுதம் அதானி மீதான அமெரிக்க விசாரணை குறித்து தங்களுக்கு எந்தவித தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை என அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.