தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி இந்தியில் அறிமுகமாகும் முதல் படமே ஓடிடி-யில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் மாநகரம். இந்த படம் ஹிந்தியில் ‘மும்பைகர்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இதன் மூலமாக விஜய் சேதுபதி முதன் முறையாக பாலிவுட் திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் கூட வெளியாகி தாறுமாறு வைரலானது. தொடர்ந்து படம் ஜூன் 2ம் தேதி ஜியோ சினிமா செயலில் இந்தி மற்றும் தமிழில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கிய திரைப்படம். எனவே இத்திரைப்படம் பாலிவுட்டில் விஜய் சேபதிக்கு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.