ஆல் இந்தியா ஏ- கிரேட் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி…
திருப்பத்துர் மாவட்டம் வாணியம்பாடியில் ஆல் இந்தியா ஏ- கிரேட் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி துவங்கியது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் உள்ள சூர்யா ஜென் பள்ளி வளாகத்தில் ஆல் இந்தியா ஏ – கிரேட் கபடி போட்டி தொடங்கியது.
இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, பஞ்சாப், உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 40க்கும் மேற்பட்ட கபடி அணிகள் பங்கேற்றனர்.
இந்த கபடி விழாவை வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் நகர சட்டமன்ற உறுப்பினர் சாரதி குமார் துவக்கி வைத்தனர்.
வெற்றி பெறும் ஆண்கள் அணிக்கு 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், பெண்கள் அணிக்கு 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என ஆல் இந்தியா ஏ- கிரேட் குழுமம் தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.