அரக்கோணத்தில் இருசக்கர வாகனங்கள் திருடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைப்பு
அரக்கோணத்தில் இருசக்கர வாகனங்கள் திருடிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் மோசூரை சேர்ந்த சுதா என்பவரின் இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் திருடமுயன்றுள்ளார்.
இதனை கண்ட வாகன உரிமையாளர் பொதுமக்களின் உதவியுன் திருடனை பிடித்து, அரக்கோணம் நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
காவலர்கள் நடத்திய விசாரணையில் ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் என்பதும் இதுவரை 50க்கும் மேற்பட்ட வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.