கார் மீது லாரி மோதி விபத்து… 2 பேர் பலி..!
சென்னை போரூர் அருகே உள்ள வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வினோத். 33 வயதாகும் இவர், தனது குடும்ப உறுப்பினர்களுடன், காரில் மேல் மருவத்தூர் கோவிலுக்கு நேற்று சென்றிருந்தார்.
சாமியை தரிசனம் செய்துவிட்டு, இன்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்தனர். அப்போது, கேரட் லோடு ஏற்றி வந்த லாரி, வினோத்தின் கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், ஒரு சிறுவன், ஒரு முதியவர் என்று 2 பேர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ரமணி, சாந்தி, வினோத், புவனா, சிப்பிகா ஆகியோர், படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானிகார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”