ஆளில்லா வீட்டில் கைவரிசை காட்டிய திருடன்..!! போலீஸ் வலைவீச்சு..!!
தூத்துக்குடி கேடிசி நகரில் வீட்டின் கதவை உடைத்து 34 கிராம் தங்கம், 2 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற திருடனை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்..
தூத்துக்குடி கேடிசி நகரில் வசிப்பவர் நிர்மல்ராஜ் சலோமியா தம்பதியினர் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நிர்மல்ராஜ் பெயிண்டராக உள்ளார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி அவரது தாய்மாமன் மகள் திருமணத்திற்காக குடும்பத்துடன் தஞ்சாவூர் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் மாடி கதவை உடைத்து அதன் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பீரோவில் இருந்த மோதிரம், வளையல், பிரேஸ்லெட் செயின் என 34 சவரன் தங்கநகை, 2 லட்சம் ரூபாய் பணம்., மற்றும் குழந்தைகள் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து நிர்மல்ராஜ் சிப்காட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.