கேரள மாநிலம் காசர்கோடு அடுத்த புல்லேரி புகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டாஞ்சல் பகுதியைச் சேர்ந்த பரம சிவம் நிவாஸில் எம்.வேணுகோபாலனின் காரில், அவரது உறவினர்களான கரக்காயடுக்கையைச் சேர்ந்த பி.கே.கிருஷ்ணன் மற்றும் பரவனடுக்கவைச் சேர்ந்த டி.அம்பிகா மற்றும் அவர்களது இரு மகள்களும் சென்றுள்ளனர்.
கார் காசர்கோடு அருகே புல்லேரி என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த போது சுமார் 11 மணி அளவில் தீப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்து புகை வருவதைப் பார்த்தவர்கள் அதில் இருந்து காரை நிறுத்தி விட்டு வெளியேறியுள்ளனர்.
எனவே இந்த தீவிபத்தில் கார் மட்டுமே தீயில் கருகி சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவமாக காரில் பயணித்த 5 பேரும் நல்லபடியாக உயிர் தப்பினர்.