பார்வையற்ற இளைஞர் நூலகத்தில் படித்து வங்கி தேர்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி
துரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் படித்த மாற்றுத்திறனாளி இளைஞர், வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மதுரையின் முக்கியப்பகுதியான தல்லாகுளத்திலிருந்து நத்தம் செல்லும் சாலையில் 215 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.
இந்த நூலகத்தின் தரை தளத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், சிறப்புப் பிரிவு அமைந்துள்ளது.
இந்நிலையில், மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான ஶ்ரீகாந்த் என்பவர், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், போட்டித் தேர்வு புத்தகங்களைப் படித்து வந்துள்ளார்.
6 மாதங்களாக இடைவிடாது படித்த ஸ்ரீகாந்த் தனியார் வங்கி நடத்திய போட்டித் தேர்வில் வெற்றி பெற்று உதவி மேலாளர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பார்வையற்ற இளைஞர் நூலகத்தில் படித்து வங்கி தேர்வில் வெற்றி பெற்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.