அழகான சருமத்திற்கு ஒரு ரகசியம்..!!
சரும பராமரிப்பில் மிக முக்கியமான ஒன்று முகம்.., எப்பொழுதும் மற்றவர்கள் முன் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருக்கும்.., சில ஃபேஸ்பவுடர் மற்றும் ஃபேஸ்பேக் முக அழகை கெடுத்துவிடும். இயற்கை முக அழகிற்கு இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..
தேவையான பொருள்கள் :
மாதுளை பழம் 2,
மாதுளம் பூக்கள் – 10,
ஆலிவ் ஆயில் – 50 மிலி,
பாதம் ஆயில் – 25 மிலி,
தேங்காய் எண்ணெய் – 100 மிலி.
செய்முறை :
* மாதுளை பழத்தை தோலுடன் துண்டு துண்டாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்,
* அதனுடன் மாதுளை பூக்கள் சேர்த்து ஒன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும், தண்ணீர் ஊற்றக்கூடாது.
* பின் ஒரு பாத்திரத்தை சூடு செய்து அதில் தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் மற்றும் பாதம் ஆயில் சேர்த்து சூடாக்கிகொள்ள வேண்டும்.
* அதில் அரைத்து வைத்த மாதுளை பழத்தை அதில் ஊற்றி எண்ணெய் நன்கு திரிந்து வரும்வரை சூடாக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, அடுப்பை ஆப் செய்துவிட்டு, இந்த எண்ணெய் ஒரு நாள் முழுவதும் காய வைக்க வேண்டும்.
* மறுநாள் காலை கண்ணாடி பாட்டிலில் ஊத்தினால் சீரம் தாயார் ஆகி விடும்.
* சீரம் எடுக்கும் டிராப்பர் அல்லது இங்க் பில்லர் வைத்து தான் இந்த சீரமை பயன்படுத்த வேண்டும்.
* நான்கு சொட்டுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.
* நான்கு சொட்டு சீரம் எடுத்து முகத்தில் மசாஜ் செய்தபடி முகத்தில் நன்கு கழுவ வேண்டும்.
* மசாஜ் செய்து பத்து நிமிடத்தில் முகத்தை கழுவி விட வேண்டும்.
* வறண்ட சருமம் உடையவர்கள் அதிக நேரம் கூட பயன் படுத்த முடியும்.
* சில சீரங்கள் இரவில் மட்டும் பயன் படுத்த முடியும், சில சீரம் பகலில் பயன்படுத்த முடியும். ஆனால் இந்த மாதுளை சீரத்தை எந்த வேலையிலும் பயன் படுத்தலாம். எந்த சருமத்தினருகம் பயன் படுத்தலாம்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..