ஒரு நொடி வாழ்க்கை தி க்ரைம் – பகுதி – 6
பரபரப்பா வீட்டுக்கு வந்த அபி ஒரு ஆல்பம் எடுத்து பார்த்து அழுக்குறாங்க. காரணம் அந்த போட்டோல அபியோட அப்பா அம்மா இருக்காங்க.
( ஒரு ப்ளாஷ்பேக் ) அபி அம்மா ஆதிரவற்றை குழந்தைகளுக்கான ஆசிரமம் தொடங்கி உதவி பண்ணுவாங்க..
ஒரு முறை கார்ல வந்த கும்பல் அந்த இடத்துல ஒரு பெரிய கம்பெனி கட்டணும் சொல்லி இடம் கேட்குறாங்க.. ஆனா.. அதுக்கு அபியோட அம்மா ஒத்துக்க மாட்டாங்க. ஏனா அந்த இடத்துல ஏராளமான குழந்தைங்களுக்கு மருத்துவ உதவி., படிப்பு எல்லாம் கிடைக்குது அதுவே இடத்தை மாத்துனா அது கிடைக்குறது ரொம்ப கஷ்டமாகிடும்னு இடம் கொடுக்க மறுத்துடுவாங்க..
இதுல கடுப்பான அந்த கம்பெனி உரிமையாளர்கள்.., அந்த ஆசிரம்பத்துல குழந்தைகளுக்கு பராமரிப்பு இல்லை.., சுகாதாரமா இல்லைனு சுகாதார துறைக்கு அனுப்பி வெச்சிடுறாங்க.. அவங்க வந்து பரிசோதிக்குற அப்போ.. அங்க முறைக்கேடு நடக்குறா மாதிரி.., எல்லாம் பண்ணதுனால அபி., அப்பா அம்மாவை போலீஸ் கைது செய்றாங்க.
கோர்ட்ல, ஆதரவற்ற குழந்தைகளை வேற இடத்துக்கு மாத்தி அந்த இடத்தை இழுத்து சீல் வெக்குறாங்க. இந்த அவமானத்துல அபியோட அப்பா அம்மா இறந்துடுறாங்க.., அவங்க கிட்ட பணம் பலம் இருந்ததுனால அபியால அப்போ எதுவும் செய்ய முடியல..
அன்னைக்கு அபியோட அப்பா அம்மா மரணத்துக்கு காரணமா இருந்த பிஸ்னஸ்வுமேன் யாருனா.. இன்னைக்கு சுஜி கடத்தி இருக்க அந்த லேடி தான்..
இதுக்கு அப்புறம் சுஜிக்கு அபி உதவி பண்ணுவாங்களா இல்லை கடமை தான் முக்கியம்னு சுஜியை கைது பண்ணுவாங்களானு அடுத்த கதையில பார்க்கலாம்.
– லோகேஸ்வரி.வெ