ஓய்ந்த தேர்தல் பிரச்சாரம்..! 57 தொகுதிகளில் இன்று..!
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
அதில் முதற்கட்டமாக 22 மாநிலங்களில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் 88 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. அதில் 66.14 சதவீதம் வாக்குகள் பதிவானது.
2-ம் கட்டமாக கர்நாடக மற்றும் கேரளா மாநிலத்திலும் நடைபெற்றது.., கடந்த மாதம் 26-ம் தேதி 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 66.71 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
3-ம் கட்டமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 65.68 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
4ம் கட்ட தேர்தலாக இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது.., லோக்சபா தேர்தல் ஒருபக்கம் நடைபெற்று கொண்டு இருக்க மறுபக்கம் சட்டசபை தேர்தலும் இன்று ஆந்திராவில் நடைபெற்றது.
5ம் கட்டமாக வாக்கு பதிவு மே 20ம் தேதி பீகாரில் சீதாமார்ஜி, மதுபானி, முசார்பூர், சரன் மற்றும் ஹஜிபூர் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
உத்தரப்பிரதேசத்தின் மோஹன்லால்கன்ஜ், லக்னோ, ரேபரேலி, அமேதி, ஜலாவுன், ஜான்சி, ஹமீர்பூர், பண்டா, ஃபடேபூர், கவுசாம்பி, பராபங்கி, ஃபசியாபாத், கைசெர்கன்ஜ் மற்றும் கோண்டா ஆகிய தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 62.2 சதவீதம், வாக்குகள் பதிவானது.
ஆறாம் கட்டமாக மே 25ம் ஜார்க்கண்ட், டெல்லி, ஜம்மு & காஷ்மீர், பீகார், ஒடிசா, ஹரியானா, உ.பி, உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. அதில் 69.58% வாக்குகள் பதிவாகியுள்ளது.
2 மாதங்களுக்கும் மேலாக களைகட்டிய மக்களவை தேர்தல் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் முழுமையாக நிறைவுபெற்றது
இறுதியாக ஏழாம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்த முறை யார் பிரதமராக பதவி ஏற்க போகிறார்கள் என்ற ஆர்வம் அரசியல் கட்சியனர்களிடம் மட்டுமின்றி பொதுமக்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என சொல்லலாம்.
– லோகேஸ்வரி.வெ
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..