கொள்ளியராக மாறிய காவலர்..!! போலீசில் சிக்கியது எப்படி..?
தருமபுரி சிறை காவலர் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சிறை காவலரை சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த காட்டம்பட்டி அருகே உள்ள குத்தால அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜப்பன் மகன் சக்தி (31), இவர் 2017 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக தேர்வு செய்யப்பட்டு சேலம் ஆயுதபடையில் பயிற்சி முடித்தபின் கோவை சிறையில் பணி செய்து வந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து மாற்றலாகி கடந்த இரண்டு ஆண்டுகளாக தருமபுரி மாவட்ட சிறையில் பணி செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி தருமபுரி அடுத்த செல்லியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பவுல் ஆண்டனி (49), என்பவரது மாடி வீட்டில் கடப்பாறை கொண்டு கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று உள்ளே இருந்து பீரோவை உடைத்து லாக்கரை உடைக்கும் பொழுது வீட்டின் உரிமையாளர் பவுல் ஆண்டனி வந்துள்ளார்.
இதனைக் கண்ட சிறை காவலர் சக்தி, அங்கிருந்த கழிவறைகுல் உள்ளே சென்று தாள் இட்டுக்கொண்டார். இதனைக் கண்ட பவுல் ஆண்டனி சத்தம் போடவே ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு சக்தியை பிடித்து மதிகோன் பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மதிகோன் பாளையம் காவல்துறையினர் விசாரித்ததில் சக்தி இரண்டு நாள் விடுப்பு எடுத்து வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் தெரியவந்தது.. இதனை அடுத்து மதி கோன் பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சக்தியை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.