ADVERTISEMENT
ஆந்திரா அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க ஆர்ப்பாட்டமா..?
ஆந்திரா அரசு தடுப்பணை கட்டுவதை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திரா அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க கோரியும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மண்டல செயலாளர் ஞானதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், ஆந்திரா அரசு தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும், இதில் தமிழக அரசு தலையிட்டு உச்சநீதி மன்ற வழக்கை விரைந்து நடத்தி தமிழக மக்களின் பாலாறு உரிமையை பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தினர்.
இதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சேர்ந்த நிர்வாகிகள்,தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.