விவசாயிகளுக்கு ஒரு குட் நியுஸ்..!! 5௦௦ கோடி ரூபாய் ஒதுக்கீடு..!! முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிக்கை..!!
விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குரை இருப்பதால் பயிர்கள் வீனடைவதாக விவசாயிகள் முன்வைத்த கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் ஸ்டாலின் ஊரகப்பகுதிகளில் 5000 நீர்நிலைகளைப் புனரமைக்க திட்டமிட்டுள்ளார்., அதற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாக தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். அதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது..
கடந்த சில ஆண்டுகளாக விவாசாயிகள் தண்ணீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபடும் செய்திகள் தொடர்ந்து பார்த்து வருகிறோம்., பிற மாநிலங்களில் கிடைக்க வேண்டிய தண்ணீரும் தமிழகத்திற்கு கிடைக்காததால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்., விவசாயிகளின் இந்த குறைகளை நீக்க தமிழக அரசு அசத்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களை ஏற்பதற்காக அமெரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு பல்நோக்கு தொழில் நுட்பங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறார். அதே சமயம் தமிழ்நாட்டில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பற்றியும் அமைச்சர்களுடன் ஆலோசித்து வருகிறார்..
அதில் ஒன்றாக ஊரகப்பகுதிகளில் 5000 நீர்நிலைகளைப் புனரமைக்க திட்டமிட்டுள்ளார்., அதற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாக தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, நீர் நிலைகளை தூர்வாரி, மழைநீரை சேகரித்து அதை நீர் மேலாண்மை செய்யும் திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்து., திட்டம் குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது..
இதன் தொடர்ச்சியாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 22,051 சிறுபாசன ஏரிகளில் முதற்கட்டமாக நடப்பாண்டில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,000 சிறுபாசன ஏரிகளை புனரமைப்பதற்காக 5.9.2024 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சிறுபாசன ஏரிகள் இயந்திரங்களைப் பயன்படுத்தி தூர்வாருதல் மற்றும் ஆழப்படுத்துதல், உபரி நீர்போக்கி (கலிங்கு), மதகு போன்ற அனைத்துக் கட்டமைப்புகளையும் பழுதுபார்த்தல் அல்லது புனரமைத்தல், இணைப்பு வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல் ஆகியவற்றை பொதுமக்கள் பங்கேற்புடன் செயல்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நீர்நிலைகளை புனரமைப்பதால், நீர்நிலைகளின் கொள்திறன் அதிகரிக்கும். நிலத்தடி நீர் மட்டம் உயரும். வேளாண் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படும். உபரி நீர் வீணாவதையும் தடுக்கும். சிறுபாசன ஏரிகளின் கொள்ளளவினை மேம்படுத்தி புனரமைப்பதன் மூலம் வெள்ளம் மற்றும் வறட்சி ஆகிய இரண்டையும் தடுக்கும். பேரிடர் மேலாண்மை முயற்சிகளுக்கு இத்திட்டம் முக்கிய பங்களிப்பு வழங்கும்.
மேம்படுத்தப்படும் ஏரிகளில் தேவைப்படும் கட்டுமானப் பணிகளான வரத்து மற்றும் போக்குக் கால்வாய், கலிங்கு, மதகு மறுசீரமைக்கும் பணிகள் தேவைப்படின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மேற்கொள்ளப்படும். சிறுபாசன ஏரிகளின் கரைகளை பலப்படுத்தி, பசுமைச் சூழலை ஏற்படுத்த பனை மற்றும் உள்ளூர் வகை மரக்கன்றுகள் நடப்படும்.
இத்திட்டம், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம், சமூக அமைப்புகள், விவசாயிகள் சங்கம், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் சொந்த நிதி ஆதாரம் மற்றும் மக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் மூலமாகவும் மற்றும் மீதமுள்ள சிறுபாசன ஏரிகளுக்கு அரசு நிதி மற்றும் ஊராட்சி அமைப்புகளின் நிதியின் மூலமாகவும் பணிகள் நிறைவேற்றப்படும்.
ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் பயன்பாட்டாளர் அமைப்புகளுடன் சேர்ந்து சிறுபாசன ஏரிகளின் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் பயன்பாட்டாளர் அமைப்பு இல்லாத பட்சத்தில், புதியதாக பயன்பாட்டாளர்கள் குழுக்கள் அமைத்து புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் மூலம் ஊரகப் பகுதி விவசாயிகள் பெருமளவில் பயன்பெறுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயரும்.” என கூறப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..