தற்கொலைக்கு முயன்ற விவசாயி..!! தரக்குறைவாக பேசிய நிதிநிறுவன ஊழியர்..!!
ராணிப்பேட்டை மாவட்டம் தவணை தொகை செலுத்தாதால், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தரக்குறைவாக பேசியதில் மனமுடைந்த விவசாயி, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வானம்பாடி கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்ற விவசாயி, கடந்த ஆண்டு தவணை முறை மூலம் 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தை வாங்கியுள்ளார். சில மாதங்கள் லாபம் கொடுத்து வந்த நிலையில்.., திடிரென விவசாயத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக நஷ்டம் ஏற்பட்டதால் தவணை தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவணை பணத்தை திருப்பி வாங்குவதற்காக, நிதி நிறுவன ஊழியர் இந்த நிலையில் பெருமாளின் வீட்டிற்கு சென்று நேரில் சென்று பணம் கேட்டுள்ளார், அதற்கு விவாசாயி தொழில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் பணத்தை சேர்த்து தருகிறேன் என கூறியுள்ளார்.
அதற்கு நிதி நிறுவன ஊழியர் பணத்தை இப்பொழுதே தர வேண்டும் என சொல்லி இருக்கிறார்.., நிலைமையை புரிந்துக்கொள்ளுங்கள் நான் அடுத்த மாதம் பணம் கொடுத்துவிடுகிறேன் என விவசாயி கூறி இருக்கிறார். ஆனால் நிதி நிறுவன ஊழியர், விவாயியை தரக்குறைவாக பேசியுள்ளார், பேசியது மட்டுமின்றி பணம் வந்து சேர வில்லை என்றால்.., குடும்பதையை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த பெருமாள், தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் விவசாயி உடன் உறவினர்கள் இருந்ததால் எதுவும் ஆகாமல் விவசாயியை காப்பற்றியுள்ளனர். தகாத வார்த்தைகள் பேசி.., தற்கொலை உணர்வுக்கு தூண்டியதால் நிதி நிறுவன ஊழியர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அழுதுள்ளனர்.