ADVERTISEMENT
டெல்லியை நோக்கி மீண்டும் விவசாயிகள்…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கடந்த மாதம் 13ம் தேதி விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.
அப்போது, ஹரியானா மற்றும் டெல்லி எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மேலும், கண்ணீர் புகை குண்டுகளை கொண்டு தாக்கப்பட்டதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து டெல்லியை முற்றுகையிடும் போராட்டாம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மார்ச் 6ம் தேதி டெல்லிக்கு வரவேண்டும் என விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன.
அதனைதொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 10-ம் தேதி நாடு தழுவிய நான்கு மணி நேர ரயில் மறியல் போராட்டத்திற்கும் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அதன்படி, டெல்லியை நோக்கி பேரணியாக செல்லும் விவசாயிகளின் போராட்டம் மீண்டும் தொடங்கினர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.