வறுமையில் தவித்த குடும்பம்.. விரக்தியில் எடுத்த முடிவு..சோகத்தில் உறவினர்கள்..!
குலசேகரம் அருகே மாமூடு பொன்னுமங்கலத்தைச் சோ்ந்தவா் அஜித் குமாா் இவக்கு ஷைலா மனைவி உள்ளார். இவா்களின் இளைய மகன் சுப்ரதீப், பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இவர், வீட்டிலிருந்தே தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
அஜித்குமாருக்கு ரப்பா் தோட்டங்கள் உள்பட ஏராளமான சொத்துகள் உள்ளன. இந்தநிலையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இதனை விற்று மருத்துவ செலவுக்காக நிறைய கடன் வாங்கி உள்ளார்.
இருப்பினும் உடல்நிலை சரியாகமல் இருந்ததால் மனமுடைந்த அஜித்குமாா் இதற்கு மேல் கடன் வாங்க முடியாது என்றும் அதை திருப்பி கொடுக்கவும் முடியாமல் தவித்த விரக்த்தியில் கடந்த 2 ஆம் தேதி அதிகாலையில் மனைவி ஷைலா மற்றும் இளைய மகன் சுப்ரதீப் ஆகியோருடன் வீட்டில் வைத்து விஷத்தை குடித்ததாக சொல்லப்படுகிறது.
தகவலறிந்த குலசேகரம் போலீசார் விரைந்து வந்து விஷம் அருந்திய மூன்று பேரையும் மீட்டு குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் ஷைலா செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்.
இதனை தொடர்ந்து அஜித்குமாா், சுப்ரதீப் இருவரையும் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அஜித்குமாா் நேற்று உயிரிழந்தாா்.
பின்னர் ஷைலா மற்றும் அஜித்குமாரின் உடல்களை உடற்கூறு ஆய்வுகாக அனுப்பி வைத்த குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்