தினமும் மது போதையில் மகன் தொல்லை.. சகித்து கொள்ள முடியாத தாய் செய்த கொடூர செயல்..!
திருச்சி மாநகரம் பீமநகர் வசித்து வருபவர் ராவுத்தர் முகமது இவரது மனைவி பர்வீன் பானு (வயது 47). தம்பதியினருக்கு தமிமுன் அன்சாரி (வயது 33), சையது அபுதாகீர் (வயது 27) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
ராவுத்தர் முகமது பல ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்துள்ளதாக என கூறப்படுகிறது. பர்வீன் பானு தனது மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். மகன்கள் இருவரும் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வருகின்றனர்.
இதில் தமிமுன் அன்சாரிக்கு திருமணமாகிய நிலையில் அவரது மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுப்பாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்த தமிமுன், குடிப்பழக்கத்திற்கு அடிமையானர். இதனால் தினமும் வீட்டிற்கு மது அருந்திவிட்டு, அவரது தாய் மற்றும் தம்பியை சரமாரியாக தாக்கி ரகளையில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதன்படி சம்பவ தினமான நேற்றும் மதுபோதையில் வந்த அவர் தாயையும், தம்பியையும் தாக்கி உள்ளார். இதனால் சகித்து கொள்ள முடியாமல் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற இருவரும் தமிமுன் அன்சாரியை கீழே தள்ளி இருக்கிறார்கள்.
கீழே விழுந்ததில் மண்டையில் அடிபட்டு மயங்கிய அவரை, கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு யாருக்கும் தெரிய கூடாது என்று அவரது உடலை, காவிரி அல்லது கொள்ளிடம் ஆற்றுக்குள் வீசி விடலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.
இதனால் ஆட்டோவில் அவரது சடலத்தை ஏற்றிக் கொண்டு, திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் பாலத்திற்கு கீழே இருந்த ஆற்றுக்குள் தூக்கி வீசி சென்றுள்ளனர்.
தகவறிந்த போலீசார் இது குறித்து திவீர விசாரணை நடத்திய போது இருவரும் தான் கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசியதை கண்டுபிடித்த ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்