Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

நீதிமன்றத்திற்கே அல்வா கொடுத்த நீதிமன்ற ஊழியர்; இருவரை தட்டித்தூக்கிய போலீஸ்!

கடலூரை சேர்ந்த பத்மநாபன் - கவுசல்யா தம்பதிக்கு சரண்யா, லாவண்யா என்ற 2 மகள்களும், விவேக் என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2003-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் பத்மநாபன் உயிரிழந்தார். இதையடுத்து கவுசல்யா மற்றும் அவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு கடலூர் கோர்ட்டில் வக்கீல் ஜெய்சங்கர் மூலம் மனு தாக்கல் செய்தனர்.

by Admin
June 2, 2023
court

கடலூரை சேர்ந்த பத்மநாபன் – கவுசல்யா தம்பதிக்கு சரண்யா, லாவண்யா என்ற 2 மகள்களும், விவேக் என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2003-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் பத்மநாபன் உயிரிழந்தார். இதையடுத்து கவுசல்யா மற்றும் அவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு கடலூர் கோர்ட்டில் வக்கீல் ஜெய்சங்கர் மூலம் மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து பத்மநாபன் குடும்பத்திற்கு ரூ.6 லட்சத்து 69 ஆயிரத்து 500 இழப்பீடு வழங்கப்பட்டது. இதில் சரண்யா, லாவண்யா ஆகியோர் குழந்தைகளாக இருந்ததால், அவர்களுக்கான பங்கு தொகை தலா ரூ.1½ லட்சம் பாலூரில் உள்ள கனரா வங்கியில் இருப்பு வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு லாவண்யா, சரண்யா ஆகியோருக்கு 18 வயது பூர்த்தியானதால், அவர்களுக்கான இழப்பீடு தொகையை கேட்டு வக்கீல் ஜெய்சங்கர் மூலம் மனுதாக்கல் செய்தனர்.

அப்போது வழக்கு எண் 826/03 என்ற வழக்கிற்கு பதில் தவறுதலாக 1826/03 என்ற வழக்கில் உள்ள ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்து 540-ஐ பெற்றுக் கொண்டனர். இதுபற்றி அறிந்த நீதிமன்ற உதவி சிரஸ்தாரராக உள்ள குணாளன் என்பவர் 826/03 என்ற வழக்கில் நீதிமன்றத்தில் இருந்த வைப்பீடு ரசீதை திருடியுள்ளார். பின்னர் நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி வழங்கியது போன்ற ஒரு போலியான கடிதத்தை தயார் செய்துள்ளார்.

இதையடுத்து கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்த சிவதாஸ் உதவியுடன் அந்த கடிதத்தை கனரா வங்கியில் கொடுத்து கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்தை பெற்று மோசடி செய்துள்ளனர். இதற்கிடையே 826/03 என்ற வழக்கில் மேலும் பணம் இருப்பதை அறிந்த வக்கீல் ஜெயசங்கர், அந்த பணத்தை பெறுவதற்காக மீண்டும் லாவண்யா, சரண்யா ஆகியோர் மூலம் இழப்பீடு தொகை கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு தொடர்பாக விசாரித்த போது தான், ஏற்கனவே 826/03 வழக்கில் இழப்பீடு தொகை பெற்றுக்கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கடலூர் முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து அந்த மனு தொடர்பாக விசாரணை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில் குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குணாளன் நீதிபதி வழங்கியது போல் போலி கடிதம் தயார் செய்து சத்தியமூர்த்தி, சிவதாஸ் உதவியுடன் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியமூர்த்தி, சிவதாஸ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குணாளனை தேடி வருகின்றனர்.

இவர் கைது செய்யப்பட்டால் தான் நீதிமன்றத்தில் வேறு யாருக்காவது மோசடியில் தொடர்பு உள்ளதா ? இன்னும் எத்தனை பேருடைய வைப்பு நிதியில் இதுபோன்று மோசடி செய்துள்ளார்கள் என்ற விவரம் தெரிய வரும் என்பதால் போலீசார் குணாளனை தீவிரமாக தேடி வருகின்றனர். அதேபோல் லாவண்யா, சரண்யா ஆகியோர் மூலம் ஜெய்சங்கர் மீண்டும் இழப்பீடு கேட்டு மனுதாக்கல் செய்துள்ளதால், அவர்களும் மோசடியில் ஈடுபட முயன்றார்களா? இல்லையா? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: cheating caseCourt employeecuddalore courtகடலூர் நீதிமன்றம்நீதிமன்ற ஊழியர் தலைமறைவுபோலி ரசீது
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post
illayaraja

இளையராஜாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.