ஊழல் சம்மந்தமாக வழக்கு தொடுத்த சாமானியர்..! 1லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்..!
ஊழல் பொருளாதார குற்றங்கள் மற்றும் தடுப்பு சட்டங்கள் கடுமையாக்கும் வகையில் அதை திருத்தம் செய்யக்கோரி மனுதாரர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். அதை உண்மை என நிரூபித்து ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்ற தனிநபர் ஒருவர் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் ” நாட்டில் ஊழல் மற்றும் பொருளாதார குற்றங்களை தடுக்கும் வகையில்.., சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும், அதற்காக சட்டங்களை திருத்தம் செய்ய வேண்டும். அந்த சட்ட திருத்தம் குறித்து சில மாநில சட்ட ஆணையங்களுக்கு உத்தரவு இட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி மற்றும் எஸ்.வி.கங்கபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய முதல் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்துள்ளது.
அந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி.., தற்போது என்ன சட்டத்தில் நீங்கள் மாற்றம் செய்ய வேண்டும் என கூறுகிறீர்கள்.., இருக்கும் சட்டம் வலுவாக தானே இருக்கிறது.., என மனுதாரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நீங்கள் தொடர்ந்துள்ள இந்த வழக்கு வெறும் விளம்பரத்திற்காக தொடரப்பட்டதாக தெரிகிறது, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த குற்றத்திற்காக.., நீதிமன்றத்தில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளன.