வாலிபர் வயிற்றுக்குள் உயிருடன் கிடந்த கரப்பான்பூச்சி…!!
வயிற்று வலி என சென்ற வாலிபர் வயிற்றுக்குள் இருந்த கரப்பான்பூச்சியை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.., இதன் முழு செய்திகள் கீழே பதிவிடப்பட்டுள்ளது..
மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியம் ஆனதே சாப்பாடும், தூக்கமும் தான். இந்த இரண்டின் மூலமாக 23 வயதான இளைஞருக்கு னிகழ்ந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனுசன் நிம்மதியாக இருப்பதே தூங்கும்போது மட்டும்தான் என்று ஊரே சொல்ல கேட்டிருப்போம்.
தூக்கம் என்பது மனிதர்களுக்கு அன்றாட அவசியத் தேவை ஆகும். 7 முதல் 8 மணி நேரம் அவசியம் தூங்க வேண்டும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். நம் உடல் உறுப்புகள் சீராக இயங்கவும், நாம் அனைத்து வேலைகளிலும் சுறுசுறுப்பாக செய்யவும் தேவையானது தூக்கம்.
படுத்த உடன் நான் தூங்கிவிடுவேன் என்று சொல்பவர்கள் எல்லோருமே வரம் வாங்கி வந்தவர்கள்தான். சிலருக்கு நாள் முழுவதும் படாத பாடு பட்டு ஒயாமல் வேலை செய்து உழைத்து களைத்து வந்தாலும் தூக்கம் வராது. சரியாக தூங்காத்தால் பல உடல் உபாதைகள் ஏற்படும். பல்வேறு உடல் பிரச்னைகளுக்கு தூக்கமின்மை வழிவகுக்கும்.
நல்ல சீரான தூக்கத்துக்காக பலர் மருத்துவமனை வாசலில் காத்திருப்பதை நாம் கேள்வி பட்டிருப்போம். அதுபோலத்தான் சாப்பாடும். நல்ல உணவு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும். இந்நிலையில், நன்றாக அசந்து தூங்கியதாலோ அல்லது நன்றாக சாப்பிட்டதாலோ டெல்லி இளைஞருக்கு அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நேர்ந்து உள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியைச் சேர்ந்த 23 வயதாகும் இளைஞருக்கு கடந்த சில நாட்களாகவே கடுமையான வயிற்று வலி மற்றும் உணவு செரிமானப் பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்து உள்ளார்.
இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது அந்த இளைஞரின் உடலில் உள்ள குடலுக்குள் கரப்பான்பூச்சி உயிரோடு இருந்து உள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்து உள்ளனர். இதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். பின்னர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சத்யா.கே