அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்…!! வாக்கு சேகரிப்பில் முக்கிய கட்சி..!!
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7கட்டமாக நடத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட உள்ளநிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் கலை கட்டி வருகிறது. அந்த வகையில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின்.., மீனவர் ஒருவர் வீட்டிற்கு சென்று டீ குடித்து வாக்கு சேகரித்தார்.
அவர் இயல்பாக செய்த இந்த செயலை தற்போது ட்ரெண்டிங் ஆக மாற்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பின் பற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன் நேற்று இரவு வாக்கு சேகரிப்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்துள்ளார்.
அப்போது விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டீ கடை ஒன்றில், ராஜேந்திர பாலாஜி தானே வந்து டீ போட்டு வேட்பாளர் விஜய பிரபாகர் மற்றும் கட்சியினருக்கு கொடுத்துள்ளார். அதனை கொடுத்த விஜய பிராபாகரன். “பேஷ் பேஷ் மாமா” டீ சூப்பரா இருக்கு என பாராட்டினார்.
அதனை தொடர்ந்து இன்று காலை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஆர். அசோகன் பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வாக்கு சேகரிப்பதற்காக ஏ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, கவுண்டம்பட்டி, பாப்பம்பாடி, தென்கரைக்கோட்டை, ஆலாபுரம், ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டமன்ற உறுப்பினர் கோவிந்த்சாமி மற்றும் வேட்பாளர் அசோகன் இருவரும் அங்கே இருந்த உணவகம் ஒன்றில் தோசை ஊற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அரியலூரில் விசிக வாக்கு சேகரிப்பு :
சிதம்பரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் தொல்.திருமாவளவன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உடன் இன்று அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
பிரச்சாரத்தில் பேசிய அவர், இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் நாம் 40க்கும் 40 தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டு கால பாஜக அவலநிலை ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
அப்பொழுது தான் பத்தாண்டு கால அவலநிலையில் உள்ள நாட்டை மீட்க முடியும். பொதுத்துறைகள் எல்லாம் தனியாருக்கு தாரை வார்த்து ஒட்டு மொத்த தேசத்தையும் விற்பனை செய்து கொண்டிருக்கும் நரேந்திரமோடி, அமித்ஷா, அதானி, அம்பானி கூட்டாளி களிடமிருந்து இந்த நாட்டை பாதுகாக்க வேண்டும்.
நமது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மூன்று ஆண்டு காலமாக மேற்கொண்ட முயற்சியின் விளைவாகதான் இன்றைய பெரும் கூட்டணி உருவாகி உள்ளது. ஆகவே நாட்டை காப்பதற்கு ஜனநாயகத்தை காப்பதற்கும் நாட்டு மக்களை காப்பதற்கும்
ஒருவேள்வியாகமாக இந்த தேர்தலை நாம் எதிர்கொள்கிறோம். எனவே பானை சின்னத்திற்கு வாக்களித்து நாம் இழந்ததை மீட்டெடுத்து வருங்கால சங்கதிகளை காக்க வேண்டுமென கூறி வாக்கு சேகரித்தார்.