கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி 3 வயது சிறுவன் பலியான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அடுத்த மேற்கு ராமாபுரம் சேர்ந்தவர் சீனுவாசன். நெடுஞ்சாலை துறை ஊழியர். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு மகன் குழந்தை தேஜஸ்வரன் (வயது 3). இன்று காலை கிழக்கு ராமாபுரத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டில் இருந்த குழந்தை தேஜஸ்வரன், சாலையில் விளையாடிக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த தனியார் பள்ளி வேன் திடீரென்று மீது மோதியது.
அப்போது குழந்தை தேஜேஸ்வரன் தலையில் சக்கரம் ஏறியதால் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுது துடித்தனர்.
பின்னர் குழந்தை தேஜேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post