இந்தியா பாகிஸ்தான் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இரு தரப்பும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வீசிக் கொண்டிருக்கின்றன. இந்த சமயத்தில் மற்றொரு தகவலும் பரவி வருகிறது. அதாவது, தோனி,மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்களும் போர்முனைக்கு செல்ல வாய்ப்புள்ளது. ஏனென்றால், இவர்கள் இந்திய ராணுவத்துக்குட்பட்ட டெர்ரிடரியல் ஆர்மியில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு வயநாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, நடிகர் மோகன்லால் ராணுவ உடையுடன் சென்று பார்வையிட்டது இதனால்தான். அப்போது, அவருக்கு அங்கிருந்த ராணுவத்தினர் ஒரு ராணுவ அதிகாரிக்குஊரிய மரியாதை கொடுத்ததும் இதன் காரணமாகவே. டெர்ரிடரியல் ஆர்மி என்பது கடந்த 1949ம் ஆண்டு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனராலான ராஜாஜியால் தோற்றுவிக்கப்பட்டது. .டெர்ரியர்ஸ் ஆர்மியில் சச்சின், மோகன்லால், தோனி, நானாபடேகர், அனுராக் தாக்கூர், சச்சின் பைலட் போன்றவர்களும் உள்ளனர்.
மொத்தம் இந்த அமைப்பில் 50 ஆயிரம் பேர் இருக்கின்றனர். போர் முழு அளவில் மூண்டால், இவர்கைள் ரெகுலர் ராணுவத்துக்கு உதவி செய்யும் பணிகளை செய்ய வேண்டும். 1962, 71, 71 ம் ஆண்டு போர்களில் இவர்கள் இந்திய ராணுவத்துக்கு உதவிக்கரமாக இருந்துள்ளனர்.
டெர்ரிடரியல் ஆர்மியில் இந்தியர் எவர் வேண்டுமானாலும் சேரலாம். 18 முதல் 42 வயது வரை உள்ளவர்கள்தான் சேர முடியும். பட்டதாரிகளாக இருக்க வேண்டும். மற்றொரு வேலையிலும் இருக்க வேண்டும்.