மத்திய பிரதேசத்தில் நோய் பாதித்த 3 வயது குழந்தையை பட்டினி போட்டு பெற்றோர் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் பியூஸ் ஜெயின், இவரது மனைவி வார்ஷா ஜெயின். இருவரும் ஐ.டி துறையில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் வியானா என்ற குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தைக்கு மூளையில் கட்டி இருந்துள்ளது. எனவே,சமண மதப்படி குழந்தையை பட்டினி போட்டு சந்தாரா என்று அழைக்கப்படும் மத சடங்கின்படி ஆன்மாவை விடுவிக்கும்டி மதத் தலைவர் ராஜேஷ் முனி மகாராஜா என்பவர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, குழந்தையை பட்டினி போட்டு கொன்று விட்டனர். அது மட்டுமல்லாமல், உலகிலேயே இள வயதில் சந்தாரா முறைப்படி இறந்தவர் என்று கோல்டன் புக் ஆப் ரிக்கார்ட்சில் சான்றிதழும் பெற்றுள்ளனர்.கடந்த மார்ச் 21ம் தேதி குழந்தை இறந்துள்ளது. தற்போது, பெற்றோர் சான்றிதழ் பெற்ற போதுதான் உண்மை உலகுக்கு தெரிய வந்துள்ளது.
இது குறித்து பெற்றோர் கூறுகையில், எங்கள் குழந்தைக்கு மும்பையில் அறுவை சிகிச்சை செய்தோம். சற்று உடல் நிலை தேறியது போல இருந்தது. ஆனால், மார்ச் மாதத்தில் மீண்டும் மோசமானது. எங்கள் குழந்தையால் உணவு சாப்பிட முடியவில்லை. தண்ணீரும் குடிக்க முடியவில்லை. இதை பார்த்து நாங்கள் மிகுந்த வேதனையடைந்தோம். எங்கள் மதகுரு ராஜேஷ் முனி மகாராஜவிடம் குழந்தையை காட்டிய போது, குழந்தையின் ஆயுள் முடிவுக்கு வந்து விட்டது., சந்தாரா முறைப்படி உணவு கொடுக்காமல் குழந்தையின் ஆன்மாவை விடுவிக்க செய்யுங்கள் என்றார். வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக் கொண்டோம். மார்ச் 21ம் தேதி 9.25 மணிக்கு சடங்குகள் தொடங்கின. 10.05 மணிக்கு எங்கள் மகள் இறந்து விட்டாள். அடுத்த பிறவியிலாவது எங்கள் மகள் துன்பம் இல்லாமல் வாழ்வாள் ‘ என்று தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், குழந்தையை இப்படி சாகடிப்பது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ள மருத்துவர்கள், மதச்சடங்குகள் என்றால். வயது வந்தவர்களுக்கு மட்டும்தான் குழந்தைகளுக்கு கிடையாது என்று தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேச மாநில குழந்தைகள் நல அமைப்பு இது தொடர்பாக சட்டடப்பூர்வமான நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதே வேளையில், சான்றிதழ் வழங்கிய கோல்டன் புகி ஆப் ரெகார்ட்ஸ் அமைப்பையும் சிலர் பொறுப்பற்ற செயலை செய்துள்ளதாக கடுமையாக சிலர் விமர்சித்துள்ளனர்.