கர்நாடக மாநிலம் ஷிமோகோவாவை சேர்ந்த மஞ்சுநாத் தன் மனைவி பல்லவி மற்றும் 18 வயது மகனுடன் காஷ்மீர் மாநிலத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பகலகம் பகுதியில் தீவிரவாதிகள் பல்லவி மற்றும் மகன் கண் முன்னரே, மஞ்சுநாத்தை சுட்டுக் கொன்றனர்.
இதைக் கண்டு பதறிய பல்லவி , நீ என் கணவரை கொன்று விட்டாய். என்னையும் கொன்று விடு என்று தீவிரவாதியிடத்தில் கூறியுள்ளார். அதற்கு, அந்த தீவிரவாதி , நீ சென்று இந்த விஷயத்தை மோடியிடம் போய் சொல் என்று திமிராக கூறியிருக்கிறான்.
இந்த சமயத்தில், மஞ்சுநாத்தின் 18 வயது மகன் அபிஜியா, தீவிரவாதியை பார்த்து, ‘நீ ஒரு நாய், என் தந்தையை கொன்று விட்டாய், எங்களையும் கொல்லு’ என்று கத்தியுள்ளார். அதற்கு, தீவிரவாதி ‘நீ மோடியிடம் போய் சொல்லு ‘என்று அதே பதிலை மீண்டும் மீண்டும் கூறியுள்ளான்.
இந்த சம்பவம் குறித்து பல்லவி கூறுகையில், ‘தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது 500 பேர் கிட்ட இங்கே இருந்தோம். இந்துக்களை குறி வைத்துதான் தாக்கினர். என்ன நடந்தது என்று தெரிவதற்கு முன்னரே அனைத்தும் முடிந்து விட்டது. எனது கணவர் என் கண் முன்னரே தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். என்னால், ரியாக்ட் பண்ணவோ அழவோ கூட முடியவில்லை. சுற்றுலா வந்த புதுமண தம்பதிகளில் கணவர்களை சுட்டுக் கொன்றனர். தீவிரவாதிகள் ராணுவ உடையில் வரவில்லைங என்று தெரிவித்துள்ளார்.
மஞ்சுநாத் குடும்பத்தினர் கடந்த ஏப்ரல் 19ம் தேதி காஷ்மீர் சென்றுள்ளனர். 24ம் தேதி அவர்கள் மீண்டும் ஷிமோகோவா திரும்ப வேண்டும். தற்போது, கணவர் சடலத்துடன் பல்லவி சொந்த ஊருக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.