Saturday, May 10, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“நலம் வாழிய நலனே”   வள்ளலார் சொன்ன  அந்த வார்த்தை..!!  

பொய்மை பேசாதிருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும்,

by logeshwari
October 5, 2024

“நலம் வாழிய நலனே”   வள்ளலார் சொன்ன  அந்த வார்த்தை..!!  

 

“அருட் பெருஞ் ஜோதி,  அருட் பெருஞ் ஜோதி  தனிப் பெருங்கருணை..”   அருட் பெருஞ் ஜோதி என்று வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என  பாடிய  வள்ளலார்  இராமலிங்க அடிகளார் அவர்களின் 201 வது பிறந்தநாள்..

இன்றைய  நாளில்  அவர் செய்த  தொண்டுகள்  பற்றியும்.,  அவரை  பற்றியும்  ஒரு  சிருதொகுப்பாக  படித்திடலாம்..   சத்தியஞான  சபையை  உருவாக்கிய  வடலூர் வள்ளலார்  இராமலிங்க  அடிகளார்  அவர்களின்  தாய் திருமதி சின்னம்மையார் அவர்களின் பூர்வீகம்  என  சொல்லலாம்..

இங்கும் ஒரு சாத்தியஞான சபை கோவில் ஒன்றை உருவாக்கி பல அறப்பணிகளை செய்து  வருகிறார்  நானும்  இன்று  பொன்னேரியில்  உள்ள  அந்த  சபைக்கு  சென்றேன்..

வள்ளலார்  இராமலிங்க  அடிகளார்   கடலூர் மாவட்டம் மருதூர் இராமையா பிள்ளை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னகாவனம்   திருமதி சின்னம்மையார் தம்பதியினரின் மகனாக அக்டோபர்  5ம்  தேதி  1823ம்  ஆண்டு பிறந்தார்

காஞ்சி குருகுலம் :

இளம் வயதிலேயே தந்தையை இழந்தார் இவரின் உடன் பிறந்த மூத்த சகோதரர் திரு.சபாபதி அவர்கள் சிறந்த சமய சொற்பொழிவாளர் தன் தம்பி இராமலிங்கத்திற்கு நல்ல கல்வியை கற்பிக்க சான்றோர்கள் உலவிய கல்வியில் சிறந்த காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி அவர்களின் குருகுலத்தில் சேர்பித்தார்

ஆன்மீகம் :

ஆனால் இராமலிங்கம் கல்வியில் நாட்டம் கொள்ளாமல் ஆன்மீகத்தில் ஈடுபடலானார் ஒரு நாள் குருகுலத்தை விட்டு வெளியேறி காஞ்சி கந்தக் கோட்டத்தில் அமர்ந்து இறைவனின் அருளைப் பெற்று  ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்.

உள் ஒன்று வைத்து புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்,

பெருமைபெறு நினதுபுகழ் பேச வேண்டும்,

பொய்மை பேசாதிருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும்

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும்

உனை மறவாதிருக்க வேண்டும்

மதி வேண்டும்

நின் கருணைநிதி வேண்டும்

நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும் என்று மனமுருகி பாடிக் கொண்டு இருப்பதைப் பார்த்த குருநாதர் மகாவித்துவான் சபாபதி அவர்கள் தன் மாணவன் இராமலிங்கத்திடம் புதைந்து கிடக்கும் தெய்வீக ஆற்றலை கண்டு கண்ணீர் சொரிந்து வாழ்த்தி அனுப்பி வைத்தார் இப்படியாக ஆறாயிரம் பாடல்களை பாடியுள்ளார் அதன் தொகுப்பே திருவருட்பா

சங்கம் :

அதற்கு பின் கடலூர் மாவட்டம் வடலூரில் சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தாமரை மலர் வடிவில் நிறுவி நுழைவு வாயிலில் புலை கொலை தவிர்த்தோர் புலால் மாமிச உணவு உண்ணாதவர்கள மட்டுமே உள்ளே புகுதல் வேண்டும் என்று எழுதப்பட்டது.  அவர் உருவாக்கிய சத்திய ஞான சபையின் நோக்கம் கடவுள் ஒருவரே அவர் ஜோதி வடிவானவர் அவருக்கு உருவம் இல்லை என்ற கருத்தை வலியுறுத்தியது

பழைமை :

தான் சார்ந்த சைவ சமயத்தில் உள்ள பிற்போக்கான மூடப் பழக்க வழக்கங்களை சீர்திருத்தம் செய்தார் மதவெறி கூடாது அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் உன்மையான ஆன்மீகத்திற்கு சாதி ஒரு தடையாய் இருக்க முடியாது ஒழுக்க நெறி இருந்தால் எந்த சாதியினரும் சன்மார்கி ஆகலாம் என்று போதித்தார்

இதை ஏற்க மறுத்து கடுமையாக எதிர்த்தனர் பழைமைவாத சாதி இந்துக்கள் அவருக்கு பல்வேறு இடையூறுகளை செய்து வந்தனர் இருப்பினும் தன் வாழ்நாளெல்லாம் சாதி சமய வேறுபாடுகளற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க அரும்பாடு பட்டார்

அணையா நெருப்பு :

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்கள் பசிபிணியை போக்க சரியாக 157 ஆண்டுகளுக்கு முன் பிரபவ ஆண்டு வைகாசி மாதம் 23 05 1867 ஆம் ஆண்டு 21 அடி நீளம் 2 1/2 அடி அகலமும் கொண்ட அடுப்பை உருவாக்கி அவர் பற்ற வைத்த நெருப்பு காற்றிலும் மழையிலும் அனையாமல் இன்று வரை எரிந்து கொண்டிருக்கிறது. நாள் தோறும் ஐந்து வேளை உணவு சமைத்து வழங்கப் பட்டு வருகிறது

மருட்பா :

அடிகளார் எழுதியது அருட்பா அல்ல என்று இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலவர் ஆறுமுக நாவலர் என்பவர் மருட்பா என்று ஒரு கட்டுரை வெளியிட்டார் இது அக்காலகட்டத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது

வழக்கு :

இதுகுறித்து 1869 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வெள்ளைக்கார நீதிபதியின் முன்னிலையில் ஆறுமுக நாவலர் வழக்கு தொடுத்தார்
வழக்கு விசாரணை தொடங்கியபோது நீதிபதி இது குறித்த வள்ளலாரின் கருத்தை கேட்டறிய நீதிமன்றத்திற்கு வரவழைத்தார்

அமைதி :

கை வீசி நடப்பதே அகங்காரம் என்று அடக்கத்தை அணிகலனாக கொண்டு அமைதியே வடிவமாக கையை கட்டிக் கொண்டு வள்ளலார் நடந்து உள்ளே நுழையும் போது அனைவரும் எழுந்து நின்று கைகூப்பி வணங்கி நின்றனர் எதிர் வாதியான ஆறுமுக நாவலரும் ஏன் வழக்கத்திற்கு மாறாக நீதிபதியும் கூட எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தார்

விசாரணை :

நீதிபதி அனைவரையும் அமர செய்து விட்டு வழக்கு விசாரணையைத் தொடங்கினார் நீதிபதி ஆறுமுகநாவலரைப் பார்த்து நீதிபதி கேட்டார் அடிகளார் வருகின்றபோது மக்கள் எழுந்து நின்றார்கள் வணங்கினார்கள் ஆனால் வழக்கு தொடுத்த எதிரி நீங்கள் ஏன் எழுந்து நின்றீர்கள் என்று கேட்டதற்கு வள்ளலார் அவர்கள் அணைவரலும் மதிக்கத்தக்க பெரியவர் அவர் வருகின்றபோது எழுந்து நிற்பது மரபு மரியாதை என்று சொன்னார்

தீர்ப்பு :

அதற்கு நீதிபதி அப்படி என்றால் பிரதிவாதியான நீங்களே வள்ளலார் மதிக்கத்தக்க பெரியவர் என்பதை ஒப்புக் கொள்கின்றீர்கள் அதோடு அல்லாமல் கைகூப்பி வணங்கியூம் உள்ளீர்கள் அப்படி என்றால் அவர் எழுதியிருக்கும் அருட்பாவும் மதிக்கத்தக்தாகத்தானே இருக்க முடியும் என்று சொல்லி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்

பாவம் :

நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனா
நட்டாற்றில் கையை நழுவ விட்டேனா
வலிய வழக்கிட்டு மானம் கெடுத்தேனா
வந்து செல்லும் பாதையில் முள்ளிட்டு அடைத்தேனா களவு செய்வோருக்கு உளவு சொன்னேனா
மனமார்ந்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனா
மண்ணோரம் பேசி வாழ்வை அழித்தேனா
குடிக்கும் நீர் உள்ள குளத்தை தூர்த்தேனா
குடிவரி உயர்த்தி கொள்ளை கொண்டேனா
வேலையிட்டுக் கூலி குறைத்தேனா
பசித்தோர் முகம் பாராதிருந்தேனா
கோள் சொல்லிக் குடும்பத்தைக் கலைத்தேனா குருவை வணங்காமல் கூசி நின்றேனா குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனா
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனா பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனா ஆலயக் கதவை அடைத்து வைத்தேனா பொது மண்டபத்தை இடித்தேனா ஆசைக் காட்டி மோசம் செய்தேனா
கொண்டவளின் கற்பை சந்தேகித்தனே தாய் தந்தை மொழியை தள்ளி நடந்தேனா தெய்வம் இகழ்ந்து செருக்கடைந்தேனா
என்ன பாவம் செய்தேனோ இன்னதென்றறியேனே

அருட் பெருஞ் ஜோதி
அருட் பெருஞ் ஜோதி
தனிப் பெருங்கருணை
அருட் பெருஞ் ஜோதி
வாழ்க வள்ளலார் புகழ்

இதை  விட  அவரின்  சிறப்பு  பற்றி  சொல்லி விட முடியுமா  அல்லது  வள்ளலார்  பற்றிய  தொகுப்பை  பதிவிடுவதில்  மதிமுகம்  என்றும்  பெருமைக்கொள்ளும்..

Tags: RAMALINGA ADIKALARஅருட் பெருஞ் ஜோதிஇராமலிங்க அடிகளார் ஆன்மீக சொற்பொழிவுநலம் வாழிய நலனேவள்ளலார் இராமலிங்க அடிகளார் பிறந்தநாள்
ADVERTISEMENT

Related Posts

சினிமா

“இவள் உலக அழகியே..” நடிகை த்ரிஷா விற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!

பாடல் ஆசரியர்

“உழைக்கும் இனமே உலக ஜெய்திடும் ஒரு நாள்…”  உழைப்பாளர்கள் தின  வாழ்த்து..!!

அரசியல்

“இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்..” கேப்டன் விஜயகாந்த்..!!

Next Post

தொடங்கியது  சிறப்பு இரயில் முன்பதிவு...!!  எந்தெந்த  ஊருக்கு சிறப்பு இரயில் இயக்கம் தெரியுமா..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

அழகே அழகில் தீட்டொரு சிலை அழகே – சாய்ப்பல்லவி 33

அங்கே சிங்கம், இங்கே பிணந்திண்ணி – பாக். பிரதமரை வறுத்த எம்பி

எனக்கு எவ்வளவு சம்பள பாக்கி இருக்கு தெரியுமா? எமோஷனலான யோகி பாபு

How to get loan on Google Pay

கூகுள் பேயில் ரூ.12 லட்சம் வரை கடன் பெறுவது எப்படி?

Trending News

அழகே அழகில் தீட்டொரு சிலை அழகே – சாய்ப்பல்லவி 33

அங்கே சிங்கம், இங்கே பிணந்திண்ணி – பாக். பிரதமரை வறுத்த எம்பி

எனக்கு எவ்வளவு சம்பள பாக்கி இருக்கு தெரியுமா? எமோஷனலான யோகி பாபு

How to get loan on Google Pay

கூகுள் பேயில் ரூ.12 லட்சம் வரை கடன் பெறுவது எப்படி?

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.