“துரியோதனன் படுகளம்..” கோலாகலமாக நடைபெற்ற கோவில் திருவிழா..!!
திருப்பத்தூர் அடுத்த ஆம்பூர் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பஞ்சபாண்டவர்கள் உற்சவ சிலைகளும் அதன் முன் பஞ்சபாண்டவர்கள் வேடம் அணிந்தவர்களும் மேள தாளங்கள் முழங்க படுகளம் நடக்கும் இடத்திற்கு வந்தனர்.
இதையடுத்து துரியோதனன் உருவ சிலைக்கு பூஜை செய்யப்பட்டு பின்னர் பீமன் துரியோதனனின் தொடையில் அடித்த படுகளம் நிகழ்ச்சியும். பின்னர் பாஞ்சாலி முடி சூடும் நிகழ்ச்சியும் நடந்தது.
இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று பாஞ்சாலி அம்மன் சிலைக்கு பூவை வைத்து முடி சூட்டி தரிசனம் செய்தனர். மேலும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு படுகளம் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நல்லூரில் இயங்கிவரும் தனியார் பள்ளி 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 35க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்தனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மாணவர்களை மீட்டனர்.
இதில் ஏழு மாணவர்கள் இரண்டு மாணவிகள் எலும்பு முறிவு மற்றும் லேசான காயங்களுடன் சில பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் மாணவ மாணவிகளை சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம் அவர்கள் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவமனையில் மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி உலக நாதநாராயணசாமி அரசினர் கலை கல்லூரியில் கட்டப்பட்ட காமராஜர் துறைமுக வெள்ளி விழா வளாகம் திறப்பு விழா நடை பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கட்டிடம் திறப்பு விழாவிற்கு ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகருக்கு அழைப்பு கொடுக்கவில்லை என கூறி காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி கல்லூரியில் முற்றுகையிட்டனர்.
மேலும் திறப்பு விழாவிற்கு சென்னை துறைமுக ஆணையம் மற்றும் காமராஜர் துறை முக நிறுவன தலைவர் சுனில் பாலிவால் வருகை தந்த போது சட்டமன்ற உறுப்பினர் ஆதரவாளர்கள் அவரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நிகழ்ச்சி பாதியிலேயே கைவிடப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றும் தமிழ் பேராசிரியை ஸ்ரீதேவி மற்றும் அவரது தோழியும் உடன் பணியாற்றும் கணிதப் பேராசிரியை திரிபுரசுந்தரி ஆகிய இருவரும் சங்கரன் கோவிலில் உள்ள உறவினரின் இல்ல சுப நிகழ்ச்சிக்கு காரில் சென்று உள்ளனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சியை முடித்து விட்டு இருவரும் திரும்பி வரும் போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புகளை உடைத்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மேலும் இந்த கார் விபத்தில் பயணம் செய்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் பேராசிரியர் ஸ்ரீதேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த இருவருக்கு சாத்தூர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் இந்த விபத்து குறித்து காவலர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் செஸ் அகாடமி சார்பாக மாவட்ட அளவிலான சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான செஸ் போட்டி தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 9வயது, 11 வயது, 13 வயதுடைய சிறுவர், சிறுமியர் என பல்வேறு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் வந்திருந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு, கரூர் டெக்ஸ் பார்க் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து கலந்து கொண்டு பரிசுக்கோப்பை, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.