விபரீதத்தில் முடிந்த விளையாட்டு..!! பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்..!!
திருப்பூர் மாவட்டம் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன்., இவரது மனைவி கொரோனா தொற்று காரணத்தினால் கடந்த 2020ம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு 5 வயதில் பிரதீஷ் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் தனது மகன் மற்றும் பெற்றோர்களுடனும் தனியாக வசித்து வரும் நிலையில் அந்த சோகம் அரங்கேறியுள்ளது..
விளையாடுவதற்காக வெளியே சென்ற சிறுவனை நீண்ட நேரமாக காணாததால் பரிதவித்த சுந்தரபாண்டியன் மற்றும் அவரது பெற்றோர் சிறுவனை தேடியுள்ளனர்.. அப்போது பிரதீஷ் எதிர்பாராத விதமாக 5 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளார். உடனடியாக அந்த சிறுவனை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்து கிராமிய போலீசார்.., வழக்கு பதிவு செய்து விபத்தா அல்லது கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.