Thursday, July 3, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! சிக்கிய பாஜக அரசியல் புள்ளி..!

வடசென்னை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி செயலாளரும், ஆற்காடு  சுரேஷின்  தோழியான பெண் ரவுடி புளியந்தோப்பு அஞ்சலையை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

by logeshwari
July 18, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

ஆம்ஸ்ட்ராங்  கொலை வழக்கு..! சிக்கிய பாஜக அரசியல் புள்ளி..!

 

 

 

 

கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

திருவேங்கடம்  என்கவுண்டர் :

அதன்  பின் அந்த வழக்கில் 11 நபர்கள் கைது செய்யப்பட்டு, செம்பியம் தனிப்படை போலீசார், போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரணை செய்தனர். அதற்கிடையே, கைது செய்யப்பட்டவர்களில்  ஒருவரான   திருவேங்கடம் என்பவரை, ஆயுதங்களை பறிமுதல் செய்ய  அழைத்துச்  சென்ற  போது தப்பி ஓட முயன்றதாக காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

போலீஸ் விசாரணை :

அதையடுத்து போலீஸ் காவலில் வைத்து 10 பேரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய பின் மீண்டும் பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்துள்ளனர். அந்த கொலையில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் களாக கருதப்படும் மூன்று பேரையும் மீண்டும் காவலில் எடுத்து   போலீசார்   விசாரணை  செய்ய  திட்டமிட்டு  வருவதாக  தகவல்கள்  வெளியானது.

பணப் பரிமாற்றம் :

மேலும் அந்த கொலையின் பின்னணியில் இருப்பது யார்..? கூலிப்படைக்கு எவ்வளவு பணம் கைமாற்றபட்டது உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குக்கு சமீபத்தில் 50 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும்,  பெண் வழக்கறிஞர் மலர் கொடியின் வங்கி கணக்கில் மிகப்பெரிய அளவில் 50 லட்சம் ரூபாய் பணம் பரிமாற்றம் நடந்துள்ளதும் தெரிய வந்தது. அதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் மலர்கொடியை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணையை நடத்தி வந்தனர்.

வழக்கறிஞர் மலர்கொடி :

ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் உறவினரான அருளின் செல்போன் அழைப்புகளை வைத்து தற்போது பெண் வழக்கறிஞர் மலர்கொடியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருளும்  வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. பழிக்குப் பழி என்னும் நோக்கில் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்திருந்த நிலையில் கொலையின் பின்னணியில் இருந்து பொருளாதார உதவி செய்தது யார்..? இந்த கொலைக்கான திட்டத்தை தீட்டி கொடுத்தது யார்..? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய குற்றவாளி :

மேலும், இந்த கொலையில் மிகப்பெரிய பொருளாதார பின்னணி கொண்ட நபர் யாரோ ஒருவர்  உதவி  செய்திருக்கிறார்  என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அருளுக்கு உதவியாக இருந்த புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் மற்றும் திருவள்ளுர் சதிஷ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களாக கருதப்படும் பொன்னை பாலு, அருள், திருமலை ஆகிய மூன்று பேரையும் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து  விசாரணை  செய்ய  திட்டம் தீட்டி வருகின்றனர். அப்போது இந்த பணப் பரிவர்த்தனை குறித்து அவர்களிடம் விசாரணை செய்ய உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளியந்தோப்பு அஞ்சலை :

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இன்னும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வடசென்னை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி செயலாளரும், ஆற்காடு  சுரேஷின்  தோழியான பெண் ரவுடி புளியந்தோப்பு அஞ்சலையை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைதான நிலையில், மேலும் 3 பேர் சேர்த்து போலீசில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இந்த படுகொலை  தொடர்பாக  கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து  வருவதால், விரைவில் இதன் பின்னணியில் இருப்பவர்கள் கண்டறியப்படுவார்கள்   எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.

– லோகேஸ்வரி.வெ

Tags: #ARMSTRONG MURDER CASEARMSTRONG MURDER ISSUEஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குபகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்புளியந்தோப்பு அஞ்சலை
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

மொறு மொறுவென ரவா தோசை...!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.