13 வயது சிறுமியிடம் வடமாநிலத்தவர் செய்த செயல்..!
பல்லடம் அருகே 13 வயது சிறுமியை வீடியோ எடுத்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் கைது.
திருப்பூர் மாவட்டம் குன்னங்கல்பாளையம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹேமந்த் குமார் பாடி என்பவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அரசு பள்ளியில் படிக்கும் நிலையில் நேற்று அந்த சிறுமி குளியல் அறையில் குளித்து கொண்டிருக்கும் போது மறைவாக நின்று ஹேமந்த் குமார் பாடி வீடியோ எடுத்துள்ளார்.
மேலும் சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் போது ஹேமந்த் குமார் பாடி சிறுமியிடம் வீடியோவை காட்டி தன்னுடன் உடலுறவில் ஈடுபட வேண்டும் எனவும் இல்லை என்றால் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி உடனடியாக தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வடமாநில இளைஞர் மீது புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஹேமந்த் குமார் பாடி மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
13 வயது சிறுமி குளிக்கும் போது வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் வடமாநில இளைஞர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ

















