மஹா பெரியவா அருள்வாக்கு..! மஹாபெரியவா கதை – 12
* கண்டதை எண்ணி மனதை குப்பைத்தொட்டி போல ஆக்கிவிட்டோம். அதைச் சுத்தப்படுத்தி மெழுகி, கடவுளை அமரவைத்து வழிபட வேண்டும். கடவுள் திருநாமங்களைச் சொல்லி புண்ணியம் தேட வேண்டும். அதுதான் மனிதப்பிறவியின் பயன்.
* மின்சாரத்தைப் போன்று கடவுளை நம்மால் காண முடியாது. ஆனால், அவர் எங்கும் வியாபித்திருக்கிறார். உலக இயக்கங்கள் அனைத்தும் அவராலேயே நிகழ்கின்றன.
* தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அந்த அளவுக்கு எளிமையாக வாழ்வதும், முடிந்த அளவுக்கு தானதர்மங்கள் செய்வதும் அனைவரும் பின்பற்றவேண்டியதாகும்.
* பிறவிப் பெருங்கடலைத் தாண்டிச் செல்வதற்கு குருவின் அருள் தேவை. எல்லாவிதமான இன்பத்திலும் துன்பத்திலும் நமக்கு அருள்பாலிப்பவர் குரு தான். நம்முடைய அறியாமை அனைத்தும் குருவால் மட்டுமே அகலும்.
* சத்தியம் என்றால் வாக்கும், மனதும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. மனதில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதே சத்தியம் ஆகும். சத்தியத்தால் நல்ல விளைவுகள் மட்டும் உண்டாகும். – ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்..
-வீர பெருமாள் வீர விநாயகம்.