உத்தரபிரதேச முதல்வராக இன்று(மார்ச்.25) யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்றார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி 273 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. இந்த வெற்றியின் மூலம் உத்தரபிரதேசத்தில், 37 வருடங்களுக்கு பின்பு ஒரே கட்சி தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வராக இன்று(மார்ச்.25) யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்றார். லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் ஆளுநர் ஆனந்தி பென படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். லக்னோவில் நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பதவியேற்பு விழா நடக்கும் மைதானத்தில் இருந்துதான் யோகி ஆதித்யநாத் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

















