“500 தாழ்தள மின்சார பேருந்துகள்..” தமிழ்நாடு போக்குவரத்துத்துறை டெண்டர்..!
மக்களின் பயன்பாட்டிற்காக 500 தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை டெண்டர் விடுத்துள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தாழ்த்தளப்பேருந்துகள் இயங்கி வருகிறது., இவை மற்றப்பேருந்துகளை விட அதி நவீன சிறப்பு அம்சத்துடனும்., வேகமாக இயங்க கூடிய பேருந்து என சொல்லலாம்., அப்படியாக,
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை இயக்கும் வகையில் ஜெர்மனி வளர்ச்சி வங்கியின் நிதியுதவியாக சுமார் 7 ஆயிரத்து 492 கோடி மதிப்பில் 5 கட்டமாக போக்குவரத்து கழக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 தாழ்தள பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த செப்டம்பர் மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
இந்நிலையில், 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை டெண்டர் விடுத்துள்ளது.
மேலும் சென்னை மாநகரில் 500 மின்சார தாழ்தள பஸ்களை இயக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில், கோவை, மதுரை நகரங்களிலும் மின்சார பஸ்களை வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..